இல்லவே இல்லை.!
தனிமை நுகராதவர்க்கு
கற்பனை நீள்வதில்லை!
கற்பனை நீளாதவர்க்கு
கவிதை வாய்ப்பதில்லை!
கவிதை வாய்க்காதவர்க்கு
காதல் உணர்வதில்லை!
காதல் உணராதவர்க்கு
மனிதம் புரிவதில்லை!
மனிதம் புரியாதவரெல்லாம்
நிச்சயம் மனிதரில்லை!
மனிதர் அல்லாதவரிடம்
எனக்கு வேலையேயில்லை!

No comments:
Post a Comment