Saturday, February 27, 2021

இல்லவே இல்லை.! (கவிதை)

 இல்லவே இல்லை.!




தனிமை நுகராதவர்க்கு

                கற்பனை நீள்வதில்லை!

கற்பனை நீளாதவர்க்கு

                கவிதை வாய்ப்பதில்லை!

கவிதை வாய்க்காதவர்க்கு

                காதல் உணர்வதில்லை!

காதல் உணராதவர்க்கு

                மனிதம் புரிவதில்லை!

மனிதம் புரியாதவரெல்லாம்

                நிச்சயம் மனிதரில்லை!

மனிதர் அல்லாதவரிடம்

                எனக்கு வேலையேயில்லை! 


No comments: