கொடும்பசியும் கொலைக்களமும்
அந்த முட்புதரின் நடுவில்
உச்சாணிக் கொம்பில்
தென்றலுக்கே உதிர்ந்துவிடும்படி
தொங்குகிறது முதிர் மாங்கனி.
எச்சிலை முழுங்கி, காற்றினைக் குடித்து
ஊழிப்பசியுடன் எத்தனிக்கும் முடவனுக்கு
மறைக்கின்றன தொரட்டிக்காரர்களின்
தொங்குசதைகளும் தொப்பைகளும்..!
- கவிஞர்.விஜய்
.jpeg)
No comments:
Post a Comment